ஸ்வர்ண காமாக்ஷி மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்
வேத வேத ரூபிணி, வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ, மாரன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
மங்களத்தின் நங்கையே, மதியணிந்த மங்கையை,
பொங்குகின்ற கங்கையே, பொன்னியான மங்கையை,
எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
துன்பமான வாழ்வொளி, இனிய ஞான பேரொளி,
அன்பு ஆன உள்ளொளி, அழகில் ஞான பேரொளி,
துன்பம் ஓட்டும் தூயொளி, துரிய ஞான பேரொளி,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
காலை மாலை இரவும் நீ,காஞ்சி தந்த வாழ்வு நீ,
வேலை வென்ற விழியவன் வேண்டி வந்த வாழ்வு நீ,
சோலை தந்த மலரும் நீ, சோகமற்ற வாழ்வு நீ,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
கரும்பு வில்லும் ஏந்தினாள், கவலை தீர்க்க ஆடினாள்,
விரும்புகின்ற மொழியினாள், விண்ணை ஆளும் விழியினாள்,
பருவமாகி முகிலுமாகி பயிருமான விழியினாள்,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
தஞ்சை வந்த தாயவள், தகைமை தன்னை பாடுவார்,
பஞ்சமற்ற வாழ்வொடு, பண்பு மிக்க மகவொடு,
மஞ்சளோடு திலகமும், மணம் மிகுந்த மலரொடும்,
விஞ்சுகின்ற புகழொடும், விண்ணும் மண்ணும் ஆளுவார்
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்
வேத வேத ரூபிணி, வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ, மாரன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
மங்களத்தின் நங்கையே, மதியணிந்த மங்கையை,
பொங்குகின்ற கங்கையே, பொன்னியான மங்கையை,
எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
துன்பமான வாழ்வொளி, இனிய ஞான பேரொளி,
அன்பு ஆன உள்ளொளி, அழகில் ஞான பேரொளி,
துன்பம் ஓட்டும் தூயொளி, துரிய ஞான பேரொளி,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
காலை மாலை இரவும் நீ,காஞ்சி தந்த வாழ்வு நீ,
வேலை வென்ற விழியவன் வேண்டி வந்த வாழ்வு நீ,
சோலை தந்த மலரும் நீ, சோகமற்ற வாழ்வு நீ,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
கரும்பு வில்லும் ஏந்தினாள், கவலை தீர்க்க ஆடினாள்,
விரும்புகின்ற மொழியினாள், விண்ணை ஆளும் விழியினாள்,
பருவமாகி முகிலுமாகி பயிருமான விழியினாள்,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
தஞ்சை வந்த தாயவள், தகைமை தன்னை பாடுவார்,
பஞ்சமற்ற வாழ்வொடு, பண்பு மிக்க மகவொடு,
மஞ்சளோடு திலகமும், மணம் மிகுந்த மலரொடும்,
விஞ்சுகின்ற புகழொடும், விண்ணும் மண்ணும் ஆளுவார்
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ